Educational news about Personality development, career guidance, Leadership Skills and more in Edubilla.com ...

 

தேர்வை எப்படி எழுத வேண்டும்?

Updated On 2015-03-09 14:48:43 Exams
3d/2d/How to write an exam.jpeg
 

எல்லாப் பாடங்களுக்குரிய தேர்விலும், அதிக மதிப்பெண் வினாக்கள், சற்றே குறைந்த மதிப்பெண் வினாக்கள் மற்றும் குறைந்த மதிப்பெண் வினாக்கள் என்ற வகைப்பாடு இருக்கும்.

எனவே, மாணவர்கள் முதலில் அதிக மதிப்பெண் வினாக்களை எழுதினால் நன்று. ஏனெனில், முதலிலேயே குறைந்த மதிப்பெண் வினாக்களுக்கு விடை எழுதும்போது, ஆர்வம் மற்றும் உற்சாகம் மிகுதியால், தேவைப்படும் அளவைவிட, அதிகமாக எழுதிக்கொண்டே செல்வோம். இதனால், பயனில்லை என்பதோடு, மிகப்பெரிய மதிப்பு வாய்ந்த நேரமானது, தேவையின்றி வீணாகிறது.

இதனால், நிறைய எழுத வேண்டிய அதிக மதிப்பெண் வினாக்களுக்கு, தேவையான அளவு எழுத முடியாமல் திணறி, மதிப்பெண்களையும் இழக்க நேரிடுகிறது.

பதில் எழுதும்போது, கேள்விக்கான பிரிவை குறிப்பிடுவதற்கும், கேள்வி எண்ணைக் குறிப்பிடுவதற்கும், எந்த வகையிலும் மறத்தல்கூடாது. அப்படி மறந்தால், கோட்டைவிடப்போவது நீங்கள்தான்.

தேர்வு மையத்தில், 30 நிமிடங்களுக்கு ஒருமுறை அடிக்கப்படும் மணியை எதிர்பார்ப்பதற்கு பதில், நம் கையில் கடிகாரம் கட்டிக்கொண்டு, அதன்மூலம் நேரத்தைப் பார்த்துக்கொண்டு எழுதலாம். தேர்வு எழுதும் முன்பாகவே, இந்த கேள்விப் பிரிவை, இவ்வளவு நேரத்திற்குள் முடித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டு, அதற்கேற்ப செயல்படவும்.

கடைசி மணியடிக்கும் வரை, எழுதுவது நல்லதல்ல. குறைந்தபட்சம் 5 முதல் 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே முடித்துவிட்டு, கேள்வி எண்கள் மற்றும் பிரிவுகள், சரியானபடி குறிப்பிடப்பட்டுள்ளதா, பதில்களின் இடையில், சரியான முறையில் கோடுகள் போடப்பட்டுள்ளதா? என்பதை சரிபார்க்கவும்.


Source-kalvimalar.dinamalar

 
 

Post Your Comments for this News

 
 
 
Note*:
If you are a new member, choose new password for your account (or) use your existing account's password to login and send message
Captcha Text
 
 

Related Exams News

Top